நாக்கில் வைத்ததும் கரையும் வகையிலான சுவையான அன்னாசி கேசரி எவ்வாறு செய்யலாம் என்று இதில் காண்போம். குறிப்பாக, அன்னாசியின் கசப்பு தெரியாமல் இதனை செய்வது எப்படி என்று செஃப் தீனா கூறுகிறார்.
நாக்கில் வைத்ததும் கரையும் வகையிலான சுவையான அன்னாசி கேசரி எவ்வாறு செய்யலாம் என்று இதில் காண்போம். குறிப்பாக, அன்னாசியின் கசப்பு தெரியாமல் இதனை செய்வது எப்படி என்று செஃப் தீனா கூறுகிறார்.
அன்னாசிப் பழத்தைக் கொண்டு எவ்வாறு கேசரி செய்யலாம் என்று செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த சுவையான கேசரியை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ரவை - ஒரு கப், அன்னாசிப் பழம் - 300 கிராம், ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், நெய் - 5 டேபிள் ஸ்பூன், மிக்ஸட் ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் - தேவையான அளவு, குங்குமப்பூ - ஒரு கிராம், எலுமிச்சை சாறு - சில துளிகள் மற்றும் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் ஒரு கடாய் வைத்துக் கொள்ளலாம். இதில் சர்க்கரை, நெய் மற்றும் அன்னாசிப் பழம் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது, சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். இத்துடன், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
இதனிடையே, குங்குமப்பூவை வெதுவெதுப்பான தண்ணீரில் சற்று ஊற வைக்க வேண்டும். இப்போது, ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் ரவையை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இதனை வறுத்த பின்னர், மீண்டும் கடாயில் நெய் ஊற்றி மிக்ஸட் ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சேர்த்து வறுக்கலாம்.
இவற்றின் நிறம் மாறியதும், கடாயில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றவும். இந்த தண்ணீர் கொதித்து வரும் போது, குங்குமப்பூவை இதில் சேர்க்கலாம். இதையடுத்து, ரவையை இத்துடன் சேர்த்து மிதமான சூட்டில் கலக்கலாம்.
ரவை கெட்டியாக வந்ததும் அதில் சர்க்கரை சேர்க்கலாம். இதன் பின்னர், இறுதியாக நெய், அன்னாசிப்பழம் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் கலந்து இறக்கி விடலாம். இவ்வாறு செய்தால் சுவையான அன்னாசி கேசரி தயாராகி விடும். இதன் சுவை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.