இந்த கொடியில் கொஞ்சுண்டு சட்னி... முட்டி வலிக்கு குட்பை சொல்லலாம்: டாக்டர் சிவராமன்
முட்டி வலியை குணப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டையில் இருந்து எவ்வாறு சட்னி தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
முட்டி வலியை குணப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டையில் இருந்து எவ்வாறு சட்னி தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பிரண்டையில் இருந்து தயாரிக்கப்படும் சட்னியை மருத்துவ சட்னி என்று அழைக்கலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஏனெனில், பிரண்டையில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. இதனால், எலும்புகள் வலிமையாகும். இது வளரக் கூடிய குழந்தைகளின் எலும்புகளை வலிமையாக்குவதுடன், பெரியவர்களின் முட்டி வலிக்கு மருந்தாக அமைகிறது. அதன்படி, பிரண்டை சட்னி எவ்வாறு செய்யலாம் என்று தற்போது பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பிரண்டை, நல்லெண்ணெய், வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் கறிவேப்பிலை.
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் பிரண்டையை சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இத்துடன் 5 வரமிளகாய்கள் மற்றும் 20 பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்ததாக, இவற்றை தனியாக எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் பிரண்டை மற்றும் தேவையான அளவு புளி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர், இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்த பிரண்டை சட்னியை சேர்த்து கலக்கலாம். இத்துடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான பிரண்டை சட்னி தயாராகி விடும். இதனை இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நன்றி - AKP Foodie Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.