அறிவியலையே ஆட்டம் காண வச்ச கீரை... வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 80 வயது வரை 'நோ' முட்டி வலி: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டையை கொண்டு எவ்வாறு சுவையான துவையல் செய்யலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும்.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டையை கொண்டு எவ்வாறு சுவையான துவையல் செய்யலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும்.
உணவு வகைகள் அனைத்திற்குமே நிறைய மருத்துவ குணம் இருக்கும். அந்த வகையில், உடலுக்கு நன்மை அளிக்கும் ஏராளமான சத்துகள் பிரண்டையில் உள்ளன. இதனை சாப்பிடும் போது முட்டி வலி ஏற்படாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, பிரண்டையை கொண்டு எவ்வாறு சுவையான துவையல் செய்யலாம் என்று தனது யூடியூப் சேனலில் செஃப் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பிரண்டை, நல்லெண்ணெய், வரமிளகாய், உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, கருப்பு எள், கிராம் புளி, தேங்காய், கொத்தமல்லி, உப்பு மற்றும் பெருங்காயத்தூள்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், பிரண்டையை வெட்டி எடுத்து விட்டு நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய்கள் சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர், உளுந்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இவற்றை நன்றாக தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை பொந்நிறமாக மாறி வரும் போது, வெட்டி வைத்திருந்த பிரண்டையை சேர்க்க வேண்டும். இப்போது அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும்.
இதையடுத்து, இரண்டு தக்காளிகளை சிறிய துண்டுகளாக வெட்டி இதில் சேர்க்க வேண்டும். இதை வதக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு எள் சேர்க்க வேண்டும். இதற்கடுத்து 25 கிராம் புளியை, 100 மி.லி தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு துருவி வைத்திருந்த தேங்காயை ஒரு கைப்பிடி அளவு இதில் சேர்த்து வறுக்க வேண்டும். இதன் பின்னர், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அதன்பின்னர், கடுகு, உளுந்து ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் தாளித்து துவையலில் ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் சுவையான மற்றும் சத்து நிறைந்த பிரண்டை துவையல் ரெடியாகி விடும்.