/indian-express-tamil/media/media_files/2025/08/04/chutney-taste-2025-08-04-14-41-52.jpg)
இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், மற்றும் வடை போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்த ஒரு சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். மற்ற சட்னிகளைப் போல் இதில் பருப்புகள் சேர்க்கப்படுவதில்லை என்பது இதன் தனிச்சிறப்பாகும். இந்த சட்னியை இட்லி அல்லது வடை மீது ஊற்றி சாப்பிடுவது அதன் சுவையை இன்னும் அதிகமாக இருக்கும். இது தக்காளி, புதினா மற்றும் வெங்காயம் சேர்த்து செய்யப்படும் சட்னியாகும்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 300 கிராம்
புதினா - ஒரு சில கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 10-15
பச்சை மிளகாய் - 7-8
பூண்டு - 2 முழு
இஞ்சி - 2 சிறிய துண்டுகள்
சக்தி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
எண்ணெய் - 150 மில்லி
செய்முறை:
இந்த சட்னியை தயாரிப்பது மிகவும் எளிதானது, மேலும் குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். முதலில், எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் வெங்காயம் சேர்த்து 40% வதக்க வேண்டும். பின்னர், பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்ததாக, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு, கலவையை ஆற வைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இறுதியாக, அரைத்த சட்னியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சட்னி தயார்.இந்த சட்னியின் சுவை அனுபவம், தொட்டு சாப்பிடுவதை விட, இட்லி அல்லது வடை மீது ஊற்றி சாப்பிடும்போது சிறப்பாக இருக்கும்.
இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல் போன்ற அனைத்து வகையான உணவுகளுக்கும் இது மிகச்சிறந்த துணையாக அமைகிறது. இட்லிக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சாப்பிட்டு ஃபோர் அடித்து விட்டது என்பவர்கள் இந்த மாதிரி ஒருமுறை சட்னி செய்து பாருங்கள். இரண்டு இட்லி சேர்த்து வாங்கி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.