பூரி செய்யும்போது சுவை மற்றும் மிருதுத்தன்மையை அதிகரிக்க என்ன எல்லாம் செய்யலாம் என்றும் அதற்கான சில எளிய வழிகள் பற்றியும் பார்க்கலாம். இப்படி செய்தால் பூரி நீண்ட நேரத்தில் சாஃப்டாக இருக்கும்.
- கோதுமை அல்லது மைதா மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துச் சேர்த்தால் பூரி ருசியாக இருக்கும்.
- பூரி மாவில் சிறிது துருவிய தேங்காய் சேர்த்துப் பிசைந்தால் புதுமையான சுவை கிடைக்கும்.
- கோதுமை மாவுடன் வறுத்த வேர்க்கடலையை அரைத்துச் சேர்த்தால் சத்தான பூரி செய்யலாம்.
- ஹோட்டல் பூரி போல உப்பலாக இருக்க, மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி சோயா மாவும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும். இது பூரியை நீண்ட நேரம் உப்பலாக வைத்திருக்கும்.
- தோல் நீக்கிய தக்காளிப் பழத்துடன் கொத்தமல்லித்தழை சேர்த்து அரைத்து, கோதுமை மாவு, உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் பூரி நல்ல நிறத்துடனும், உப்பலாகவும், சுவையாகவும் இருக்கும்.
- மாவு பிசையும்போது சூடான பால் சேர்த்தால் பூரியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
பூரி மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையும், ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துப் பிசைந்தால் பூரி நன்கு உப்பி வரும்.
- பூரிக்குத் தொட்டுக்கொள்ளும் கிழங்கு மசாலாவில் சிறிதளவு பொட்டுக்கடலைப் பொடி சேர்த்தால் சுவையும், மணமும் அதிகரிக்கும்.
- பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்க கோதுமை மாவுடன் சோள மாவு (கார்ன்ஃப்ளார்) மற்றும் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
- இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுடன் மோர் சேர்த்து மாவு பிசைந்தால் புளிப்பும், காரமும் கலந்த சுவையான பூரி கிடைக்கும்.
- நான்கு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான பூரி தயார் செய்யலாம்.