/indian-express-tamil/media/media_files/2025/08/15/urad-bonda-2025-08-15-20-28-27.jpg)
உளுந்து போண்டா மிருதுவாகவும், உப்பலாகவும் இருக்க வேண்டுமென்றால், ஒரு சிறிய ரகசியம் உள்ளது. மாவை அரைக்கும் போது சாதாரண தண்ணீருக்குப் பதிலாக ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதன் மூலம், போண்டா மென்மையாகவும், எண்ணெய் குடிக்காமலும் இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ஸ்ரீபவா இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சுவையான இந்த உளுந்து போண்டா ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1 கப்
ஐஸ் கட்டிகள் - 1/2 கப் (அல்லது தேவைக்கேற்ப)
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
உளுந்தை 2-3 மணி நேரம் நன்கு ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிடவும். ஊறவைத்த உளுந்தை மிக்ஸி ஜாரில் அல்லது கிரைண்டரில் போட்டு, சாதாரண தண்ணீருக்குப் பதிலாக ஐஸ் கட்டிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். ஐஸ் கட்டிகள் சேர்ப்பதால் மாவு சீக்கிரம் சூடாகாது, இதனால் போண்டா மிருதுவாக இருக்கும். மாவு வடை மாவை விட சற்று மென்மையாக, ஆனால் போண்டா போடும் அளவுக்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் உப்பு, மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். உங்கள் கைகளை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். போண்டா எண்ணெயில் மிதந்து உப்பலாக வரும். பொரித்த போண்டாவை ஒரு பேப்பர் டவலில் எடுத்து வைத்து, கூடுதல் எண்ணெயை வடித்துவிடவும். சூடான சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.