பல வகை உணவுகள் உள்ளன. ஒவ்வொரு ஊர், மாநிலத்திற்கு ஏற்ப உணவு வகைகள் மாறுபடும். ஒவ்வொரு ஊர், மாநிலத்திற்கு என்ற சிறப்பு உணவு வகைகள் உள்ளன. பாராம்பரிய உணவு வகைகளும் உள்ளன. வெவ்வேறு மற்றும் விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். இங்கு கோவா பேமஸ் உணவான தேங்காய்ப்பால் போஹா எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம். போஹா என்பது அவல் ஆகும். வட இந்தியாவில் போஹா என்று கூறப்படும்.
தேவையான பொருட்கள்
அவல் - 200 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
செய்முறை
தேங்காய்ப்பால் போஹா இனிப்பாக சுவையான இருக்கும். முதலில் ஏலக்காயை பொடித்து எடுத்துக் கொள்ளவும். அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின், அவலை எடுத்து அரை கப் சூடு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் தேங்காய் அரைத்து தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.
இந்த கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். ஏலக்காய்த் தூளை மேலே தூவி கிளறவும். அவ்வளவு தான் சூடான, சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/