கிட்டப் பார்வை எட்டிப் பார்க்காது... இந்தக் கீரை கிடைச்சா விடாதீங்க!

அனைவருக்கும் கீரை பிடிக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை. அனால் இப்படி செய்து பாருங்க குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. பொன்னாங்கண்ணி கீரை கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

அனைவருக்கும் கீரை பிடிக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை. அனால் இப்படி செய்து பாருங்க குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. பொன்னாங்கண்ணி கீரை கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ponnanganni keerai kootu

பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டால், தேளிர் போல ஜொலிக்கும் தோற்றம் கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட பயனுள்ள கீரையை வைத்து சுவையாக கூட்டு செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

Advertisment

பொன்னாங்கண்ணி கீரை
பாசிபருப்பு
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
பூண்டு 
தக்காளி
மஞ்சள் தூள்
உப்பு
சோம்பு
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
தேங்காய் துருவல்

முதலில் பொன்னாங்கண்ணி கீரை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். இப்போது ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் விட்டு வேக விடவும். 

அதற்குப் பிறகு சீரகம் மற்றும் பூண்டை இடித்து வைக்கவும். இப்போது பருப்பு நன்கு வெந்திருக்கும். ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உலர்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், இடித்த பூண்டு மற்றும் சீரகத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

Advertisment
Advertisements

பின்னர் அதில் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரை சேர்த்து வேகவிட்டு வேகவைத்த பருப்பையும் அதில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு கொதிக்க விட்டு எடுக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் சுவையான பொன்னாங்கண்ணி கீரை ரெடி ஆகிவிடும்.

அவ்வளவு தான்... soodaana சுவையான கூட்டு தயார்!

இதை சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி தோசை என்று எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். 

பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இதை நெய்யில் வதக்கி கண்களில் ஒத்தடம் போல பயன்படுத்தினால், கண் பார்வை மேம்படும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும் என்று கூறப்படுகிறது. 

பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இந்த கீரையை சாப்பிட்டால் சருமம் பொலிவடையும் என்று நம்பப்படுகிறது. 

இது ஈரப்பதமான இடங்களில் வளரும். பொன்னாங்கண்ணி கீரையை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இது கண்களுக்கும், உடலுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. அதனால் சற்றும் யோசிக்காமல் இதை உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: