கோதுமை மாவுடன் சில பொருட்களை அரைத்துச் சேர்ப்பதன் மூலம் பூரியை மிகவும் சுவையாகவும், விரும்பத்தக்கதாகவும் மாற்ற முடியும். அப்படி செய்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி இந்த முறையிலேயே பூரி செய்து தரச் சொல்லி அடம்பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு - 4 பல் உளுந்து - அரை கப் ஓமம் - 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு கோதுமை மாவு - 2 கப் தக்காளி - 3 காய்ந்த மிளகாய் - 8 பூண்டு - 7 பல்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஊற வைத்த உளுந்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு பவுலில் மாற்றி ஓமத்தை கசக்கி போடவும். அடுத்ததாக மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தில் வந்ததும் மேலே எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
மாவு நன்கு ஊறி வந்ததும் இதை எப்போதும் போல பூரிக்குத் திரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும். இது பூரி மாதிரியும் சாப்பிடலாம் இதோட தக்காளி சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.