கும்பகோணம் ஸ்டைலில் வீட்டில் மொறு மொறுன்னு புசுபுசு பூரி மற்றும் சுவையான உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை மாவு - 1 கிலோ உப்பு எண்ணெய் உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வெங்காயம் - 1 கிலோ தக்காளி - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 6 கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு போட்டு அதில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து தண்ணீர் ஊற்றி சிறிது எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும் அந்த இடைவெளியில் மசாலா செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அது புரிந்து வந்ததும் கடலை பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை எண்ணெயில் வறுக்கவும். பின்னர் அதில் சிறிது உப்பு போட்டு கலந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு ஐந்து நிமிடம் வெங்காயத்தை வதக்கி விட்ட பின் தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வதக்கவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்க விடவும். வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை இதில் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் சப்பாத்தி மாவையே சிறிது கரைத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.
அவ்வளவுதான் மசால் கொதி வந்ததும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கிவிடலாம். எப்போதும் போல மாவை எடுத்து பூரி தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.