பழைய சாதம் மீதியானால் கவலை வேண்டாம்… டேஸ்டியான பூரி செய்யலாம்; சிம்பிள் டிப்ஸ் இங்கே

பழைய சாதம் மீதியானால் அதனை கொண்டு எவ்வாறு பூரி செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

பழைய சாதம் மீதியானால் அதனை கொண்டு எவ்வாறு பூரி செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Poori recipe

பல நேரங்களில் நாம் வீட்டில் செய்யும் சாதம் மீதமாகி விடும். அவ்வாறு சாதம் மீதமாகும் போது என்ன செய்யலாம் என்று யோசித்திருப்போம். இனி அந்த கவலையே இல்லாமல் மீதமான சாதத்தை வைத்து சுவையான பூரி செய்யலாம். அதற்கான செய்முறையை இதில் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சாதம் மற்றும் 
கடலை பருப்பு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பழைய சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு புறம், ஒரு கப் அளவிற்கு கடலை பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த இரண்டையும் பசை பதத்திற்கு நன்றாக அரைக்க வேண்டும்.

இத்துடன் அரை கப் அளவிற்கு கோதுமை மாவை கலக்க வேண்டும்.  இதை ஓரளவிற்கு கலந்த பின்னர், மீண்டும் அரை கப் கோதுமை மாவு சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலக்க வேண்டும். அதன் பின்னர், இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது உருட்டி வைத்திருக்கும் மாவை, பூரி அளவிற்கு சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்க வேண்டும். இனி அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேய்த்து வைத்திருக்கு மாவை போட்டு சுட்டு எடுக்கலாம். இவ்வாறு செய்தால் சுவையான பூரி தயாராகி விடும். எனவே, சாதம் மீதியானால் கவலைப்படாமல் இவ்வாறு சுவையான பூரி செய்து சாப்பிடலாம். 

Advertisment
Advertisements

நன்றி - Saranya Pramod Youtube Channel

Poori

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: