செட்டிநாடு ஸ்டைல் உருளைக் கிழங்கு ப்ரை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
பேபி உருளைக் கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பேபி உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும். அவ்வளவு தான் செட்டிநாடு மசாலா தூள் தயார்.
மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும். அவ்வளவு தான் காரம், சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“