செஃப் தாமு ஸ்பெஷல் இறால் பிரியாணி செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
இறால் சீரக சம்பா அரிசி வெங்காயம் தக்காளி புதினா, கொத்தமல்லி பட்டை, லவங்கம், ஏலக்காய் மிளகாய் தூள் கரம் மசாலா தேங்காய் பால் எண்ணெய் பச்சை மிளகாய்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பிரிஞ்சி இலை, லவங்கம், புதினா போடவும். அடுத்து வெங்காயம் வதங்கி வந்த பின் தக்காளி சேர்த்து வதக்கவும். சீரக சம்பா அரிசி ஏற்கனவே ஊற வைத்து விடவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Advertisment
Advertisement
அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து மிளகாய் தூள். தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து வைக்கவும். இதை எல்லாவற்றையும் இப்போது கடாயில் சேர்த்து விடவும். உப்பும் சேர்க்கவும்.
இப்போது ஊற வைத்த அரிசி சீரக சம்பா அரிசியை சேர்த்து விடவும். இதன் பின் சுத்தம் செய்து வைத்த இறால், கொத்தமல்லி சேர்த்து விடவும். 1 கப் தண்ணீர் சேர்த்து கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கி விடவும். மூடி போட்டு மூடவும். விசில் வந்ததும் எடுத்து கிளறி நெய் சேர்த்து இறால் பிரியாணி பரிமாறலாம். திண்டுக்கல் ஸ்டைல் இறால் பிரியாணி ரெடி.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news