Advertisment

கறிவேப்பிலை, கொத்தமல்லி.. மசக்கை வாந்தி நிற்க இப்படி செய்ஞ்சு குடிங்க

மசக்கையில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் சில அத்தியாவசிய வீட்டு வைத்தியங்களை உணவியல் நிபுணர் அகன்ஷா ஜே ஷர்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

author-image
WebDesk
New Update
lifestyle

This ‘magical drink’ may help treat morning sickness during pregnancy

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம். இருப்பினும் அது அவ்வளவு சுலபமானதும் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல், சோர்வு என இந்நாளில் கர்ப்பிணிகள் உடல் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்கின்றனர். இதைத்தான் மருத்துவர்கள் மார்னிங் சிக்னஸ் என்று அழைக்கின்றனர்.

Advertisment

இந்த வாந்தி, காலையில் மட்டுமல்லாமல், எல்லா வேளைகளிலும் அதிகம் காணப்படுகிறது. மேலும் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் முடியும்போது மெல்லக் குறைந்தும் விடுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதோ, பட்டினி கிடப்பதோ நல்லதல்ல.  அடிக்கடி வாந்தி வருகிறது என்பதற்காக சாப்பிடாமல் இருப்பதைக் காட்டிலும் 3 முறை மட்டுமே சாப்பிடாமல் 6 அல்லது 7 முறை என பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதன் மூலம் தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நீர்ச்சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது நல்லது.

மசக்கையில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் சில அத்தியாவசிய வீட்டு வைத்தியங்களை உணவியல் நிபுணர் அகன்ஷா ஜே ஷர்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மார்னிங் சிக்னெஸ், கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. கறிவேப்பிலை தேநீர் குடிப்பது வாந்தி மற்றும் குமட்டலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

தேவையான பொருட்கள்

1 கிளாஸ்- தண்ணீர்

10-15 - கறிவேப்பிலை

1 தேக்கரண்டி - கொத்தமல்லி

எப்படி செய்வது?

தண்ணீரை ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போடவும். வடிகட்டி குடிக்கவும்.

கொத்தமல்லி வைட்டமின் கே நிறைந்து, இது வயிற்று வலியை போக்கும். அவை செரிமான கோளாறுகள், வயிற்று போக்கு, மார்னிங் சிக்னெஸ் மற்றும் வாந்தி ஆகியவற்றைத் தடுக்கின்றன என்று ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பகிர்ந்து கொண்டார்.

மகப்பேறு மருத்துவர் ஷோபா குப்தா பகிர்ந்த மேலும் சில வைத்தியம்

உங்கள் வயிற்றை சரி செய்ய இஞ்சி டீ குடியுங்கள். நீங்கள் குமட்டலாக உணரும் போதெல்லாம், சிறிது சூடான இஞ்சி டீயை பருகவும்.

உங்கள் படுக்கைக்கு அருகில் சிறிது பெருஞ்சீரகம் வைத்து, நீங்கள் சோர்வாக உணரும் போதெல்லாம் அவற்றை மென்று சாப்பிடுங்கள்.

ஒவ்வொரு மணி நேரமும், ஒரு கிளாஸ் தண்ணீர் பருகவும். நள்ளிரவில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இதன் விளைவாக, நீங்கள் நீரேற்றமாக இருப்பீர்கள். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்கள் சிறுநீர் தெளிவாக இருக்க வேண்டும்.

எலுமிச்சைத் துண்டை முகர்ந்து பார்க்கலாம். சில துளி எலுமிச்சை கலந்த தண்ணீரையும் குடிக்கலாம்.

குமட்டலை ஊக்குவிக்கும் வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment