/indian-express-tamil/media/media_files/2025/06/11/K4LVEbInYcDSNITwoKYK.jpg)
புதினா சட்னி பெண்கள் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ள உதவும் மிகச்சிறந்த உணவு. இது அவசரத் தேவைக்கு மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கின்றது.
சட்னி பொதுவாக சாண்ட்விச் செய்வதற்கு, தோசை, குழம்பு வகை உணவுகளுக்குப் பொருத்தமாக இருக்கும். வீட்டில் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாதபோது ஃபிரெஷாக செய்து வைத்திருக்கும் புதினா சட்னி அல்லது துவையல் தான் கைக்கொடுக்கும். அவை நம் ஆரோக்கியத்திற்கும் கைக்கொடுக்கும். எப்படித் தெரியுமா?
இந்திய உணவுகளில் சில உணவுகள் செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்குவது பொதுவானது. புதினா சட்னியைத் தயாரிக்கும் போது கொத்தமல்லி, எலுமிச்சை, கருப்பு உப்பு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கும்போது செரிமானத்திற்கு உதவுவதுடன் உணவிற்கு மேம்பட்ட சுவையையும் தருகிறது.
புதினா சட்னியில் கொஞ்சம் அதிகமாக கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், கொத்தமல்லியில் இருக்கும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பைத் தூண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
புதினா வயிற்றுக்கு நல்லது. குறிப்பாக கொத்தமல்லி, எலுமிச்சை போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு அழற்சியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
பசியை உணராதது உடல் பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த சட்னியை உங்கள் வழக்கமான உணவில் சேர்ப்பது பசியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சுவையையும் மேம்படுத்துகிறது.
புதினா இலைகள் இயற்கையாகவே புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன, அவை குமட்டலிலிருந்து விடுபட உதவுகின்றன, இதனால் உடனடியாக ஃபிரெஷாக உணர முடியும்.
கொத்தமல்லி இலை, புதினா இலைகளில் பூஞ்சை காளான் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. புதினா சட்னியைத் தவறாமல் உட்கொள்வது சரும பாதிப்புகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. இது நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. புதினா, கொத்தமல்லியைச் சேர்த்து அரைத்த சட்னியை உட்கொள்வது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உதவுகிறது. கொத்தமல்லி மற்றும் புதினா இரண்டிலும் போதுமான இரும்புச்சத்து உள்ளது.
இதை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவியான பொருட்கள்:
புதினா - 2 கைபிடி
கடலைப்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
பூண்டு - 3
புளி - சிறிதளவு
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
புதினா சட்னி செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அதில் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து சுமார் ஒரு நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.
அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் துருவிய தேங்காய் சுவை கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சட்டினியை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு தாளித்த இதனை சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் டேஸ்டான புதினா சட்னி ரெடி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.