பூசணிக்காயில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. பூசணிக்காய் மிகவும் இனிப்பான காய்கறி ஆகும். குழந்தைகளும் விரும்பி சாப்டுவர். பொதுவாகவே நம் ஊர் பகுதிகளில் பூசணிக்காய் விளைச்சல் நன்றாக இருக்கும். பூசணிக்காய் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இதில் டேஸ்டியாக ஒரு ரெசிபி செய்தால் எப்படி இருக்கும். சுவையான, சூடான கட்லெட் செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
சோளமாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1டீஸ்பூன்
பிரெட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின் சிறிது நேரம் ஆற விடவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மசால் தூள், மிளகு தூள், எலுமிச்சம் பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக்
கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு பிரெட் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
அடுத்ததாக, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டையாக செய்து வைத்துள்ள கட்லெட்டை போட்டு எடுக்கவும். மிதமான தீயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும். அவ்வளவு தான் சுவையான, சூடான கட்லெட் தாயர். தக்காளி சாஸ்சுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/