பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
வெங்காய வடகம் – 6
சின்ன வெங்காயம் – 10
மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – ஒரு சிறு துண்டு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 6 பல்
தக்காளி – 1
மஞ்சள் பூசணிக்காய் – 2 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்ர்த்து வதக்கி மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளி தண்ணீர் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க விடவும். அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“