உலகிலேயே சுத்தமான தேன்: நம்ம தமிழகத்தில் கிடைக்கிறது: ஆச்சரியமூட்டும் பின்னணி கதை

கொடைக்கானலில் பளியர் பழங்குடியினரால் எடுக்கப்படும் தேன் மற்றும் மற்ற பொருட்களை உலகம் முழுவதும் ஹுப்பி ஆன் எ ஹில் நிறுவனம் விற்பனை செய்கிறது.

கொடைக்கானலில் பளியர் பழங்குடியினரால் எடுக்கப்படும் தேன் மற்றும் மற்ற பொருட்களை உலகம் முழுவதும் ஹுப்பி ஆன் எ ஹில் நிறுவனம் விற்பனை செய்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுத்தமான தேன்

சுத்தமான தேன்

கொடைக்கானலில் பளியர் பழங்குடியினரால் எடுக்கப்படும் தேன் மற்றும் மற்ற பொருட்களை உலகம் முழுவதும் ஹுப்பி ஆன் எ ஹில் நிறுவனம் விற்பனை செய்கிறது.

Advertisment

Dw-தமிழ் யூடியூப் சேனலில், இயற்கையாக கிடைக்கும் கொடைக்கானல் தேன் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளது. இதிலிருந்து எடுக்கப்பட்ட  தகவல் இந்த தொகுப்பில் உள்ளது குறிப்பிடதக்கது.   

ஹுப்பி ஆன் எ ஹில் என்ற நிறுவனம் கொடைக்கானலில் கிடைக்கும் சுத்தமான தேனை  விற்பனை செய்துவருகிறது. அதன் மேலாளர் ஷோபனா கூறுகையில் ’ முதலில் 2 பெண்களை வைத்து இந்த நிறுவனத்தை தொடங்கினோம். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது, தற்போது 10 பெண்களுக்கு மேலாக வேலை செய்கிறோம். நிஷிதா ப்ரியாதான் நிறுவனத்தின் உரிமையாளர். இவர்கள் பணி நிமித்தமாக காட்டுக்கு சென்றபோது, அங்கு உள்ள பளியர் பழங்குடியினர் அதிக தேன் வைத்திருப்பதை கண்டறிந்தனர். அவர்களால் அதை விற்பனை செய்ய முடியவில்லை.இநிந்லையில் இதை விற்பனை செய்ய நிறுவனம் தொடங்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

மேலும் பேசிய அவர் “ காலத்திற்கு தகுந்தது போல் பழங்குடியினர் எங்களிடம் தேனை எடுத்துக்கொண்டு வந்து தருவார்கள். அதை சுவைத்து பார்த்து எந்த வகை என்று தரம் பிரித்து, வடி கட்டி, கேனில் பேக் செய்து விற்பனை செய்கிறோம். இது மட்டும் இல்லாமல் தேன் கூட்டில் இருக்கும் வாக்ஸ் மற்றும் தேனின் ராட்டுகளை பயன்படுத்தி கிரையான்ஸ் மற்றும் லிப் பாம் செய்கிறோம்” என்று அவர் கூறுகிறார்.

சுமார் 100 வருடங்களாக கொடைக்கானலில் உள்ள பளியர் பழங்குடியினர்தான், காட்டிலிருந்து தேன் சேகரித்து வருகின்றனர். தேன் எடுக்கும் முறை பற்றி மாரியப்பன் கூறுகையில் “ இரவில் தேன் எடுத்தால்தான் தேனீக்கள் கடிக்காது.. நாங்க ஏற்படுத்தும்  புகையிலிருந்து தேனீக்களின் கூடுகளில் தீப் பற்றி எரியக்கூடாது என்பதற்காக, பச்சை இலைகளையும் சேர்த்து பந்தம் கட்டுவோம். ஒரு வருடத்திற்கு 2 டன் வரை தேன் கிடைக்கும். சில நாட்கள் 200 லிட்டர் தேன் கிடைக்கும், சில நாட்கள் 10 லிட்டர் வரைதான் கிடைக்கும். 200 லிட்டர் கிடைத்தாலும், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். அதுபோல 10 லிட்டர் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக  ஏற்றுக்கொள்வோம். ´என்று அவர் கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Dw Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: