/indian-express-tamil/media/media_files/2025/04/30/SV5vUJ7nh3gzhBDLKIDf.jpg)
கேழ்வரகு மாவில் செய்யப்படும் குலுக்கு ரொட்டி ஒரு பாரம்பரிய உணவு என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். மாம்ஸ் மன்சிஸ் (@MomsMunchiess) என்ற யூடியூப் சேனலில் இந்த குலுக்கு ரொட்டி எப்படி செய்வது என்று செய்துகாட்டியுள்ளனர்.
கோடை விடுமுறையில் வீட்டில் குழந்தைகளுக்கு விதவிதமான, ஆரோக்கியமான உணவுகளை சமைத்து தர வேண்டும் என திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்களுக்காக கேழ்வரகு மாவில் குலுக்கு ரொட்டி செய்வது எப்படி என்று கூறுகிறோம்.
கேழ்வரகு மாவில் செய்யப்படும் குலுக்கு ரொட்டி ஒரு பாரம்பரிய உணவு என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். மாம்ஸ் மன்சிஸ் (@MomsMunchiess) என்ற யூடியூப் சேனலில் இந்த குலுக்கு ரொட்டி எப்படி செய்வது என்று செய்துகாட்டியுள்ளனர்.
கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான ஒரு திண்பண்டமாக இந்த கேழ்வரகு குலுக்கு ரொட்டியை செய்துகொடுக்கலாம். பொதுவாக கேழ்வரகு சத்தான ஒன்று.
கேழ்வரகு மாவில் குலுக்கு ரொட்டி செய்முறை:
கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆவியில் நன்றாக வேக வைத்து எடுத்து, நெல்லிக்காய் போல சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை மீண்டும் ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள், அதில், ஆவியில் வேக வைத்த கேழ்வரகு மாவு உருண்டைகளைப் போட்டு மிதக்க விடுங்கள், அதன் மேல் தேங்காய் துருவல் சிறிது அளவு தூவி விடுங்கள், அதே போல, ஏலக்காய் துள் சிறிது அளவு தூவி விடுங்கள். அதை 2 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். அவ்வளவுதான், சுவையான கேழ்வரகு குலுக்கு ரொட்டி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.