/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project1.jpg)
சத்தான உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு சிறந்தது. ராகி, கம்பி, சோளம் போன்ற தானியங்களை உட்கொள்வது நம் காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது. இந்த உணவுகளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாறிவரும் காலத்தில் இந்த உணவுகளை நாம் மறந்து வருகிறோம். உணவு டேஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் சத்தானதாக இருக்கிறதா என பார்ப்பதில்லை. இப்போது நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த ராகி சேமியா புட்டு எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். ராகியில் இருப்பு சத்து அதிகம் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு (ராகி) சேமியா - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை
முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு சேமியா போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும். பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். பின்னர் இட்லி தட்டு வைத்து அதில் சேமியாவை போட்டு வேக வைக்கவும். சேமியா வெந்ததும் அதை எடுத்து அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.