எப்பொழுதும் காலையில் இட்லி, தோசைக்கு அடுத்தப்படியாக உப்புமா சாப்பிடுவது வழக்கம். அத்தகைய உப்புமாவை ருசியாகவும் சத்தாகவும் செய்து சாப்பிட வேண்டும் அல்லவா? அப்படி சத்தான உப்புமாவிற்கு ராகி உப்புமா ட்ரை பண்னுங்க.
குறிப்பாக ராகி உப்பு உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் உகந்த காலை உணவாகும். இப்போது அந்த ராகி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு
தயிர்
வெங்காயம்
பச்சை மிளகாய்
உப்பு
உளுத்தம் பருப்பு
கடலைப் பருப்பு
கடுகு
சர்க்கரை
துருவிய தேங்காய்
கொத்தமல்லி
கருவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு கப்பில் ராகி மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து உதிரி உதிரியாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.நன்கு வதங்கியதும் அதில் ராகி மாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறி விடவும்.
பின் உப்புமா போன்ற பதத்தில் வரும் போது, அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், ராகி உப்புமா ரெடியாகிவிடும்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை
தேங்காய்
புளி
உப்பு
கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
வரமிளகாய், எண்ணெய்
வேர்க்கடலை
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து அதில் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை, தேங்காய், புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும். இதனை ஆறவைத்து ஒரு மிக்சர் ஜாரில் அவற்றைப் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் நீரை ஊற்றி ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கொரகொரப்பாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் எப்போடும் போல தாளித்து சட்னியில் சேர்த்தால் தேங்காய் சட்னி ரெடியாகி விடும். இந்த ரவா உப்புமாவோடு சேர்த்து தேங்காய் சட்னி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“