தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கும் வாய்ப்பு உள்ளதால்,  கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பாக வெளியான  அறிக்கையில் “  வருகின்ற 14, 15 ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கிழக்கு  ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹெ ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும். 

வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு  ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் 17 ம் தேதி வரை கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15ம்  தேதி வரை மழை பெய்யும்  என்று எதிர்பாக்கப்படுகிறது. இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Advertisment
Advertisements

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: