கணக்கில்லாமல் தோசை சாப்பிடலாம்... இந்த சட்னி ஒரு ஸ்பூன் போதும்!

பூண்டு என்பது நமக்கு எவ்வளவு சத்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து ஒரு ராஜஸ்தானி ஸ்டைல் சட்னி செய்ய முடியும் என்று தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

பூண்டு என்பது நமக்கு எவ்வளவு சத்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து ஒரு ராஜஸ்தானி ஸ்டைல் சட்னி செய்ய முடியும் என்று தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-30 181813

நாம் வீட்டில் எந்த வகையான டிபன் செய்தாலும் நமக்கு பெரிய தலைவலியாக வருவது சைடு-டிஷ் தான். விதவிதமாக எதை தான் மாற்றி சமைப்பது என்பது தான் அதில் இருக்கும் மிகப் பெரிய கஷ்டம். ஒவ்வொரு டிபன் வகைக்கும் அதுக்கு ஏத்த மாதிரி சட்னி சாம்பார் இல்ல குருமா செய்யணும். எல்லா டிபன் வகைக்கும் ஒத்து போற மாதிரியான ஒரு சட்னி தான் ராஜஸ்தானி பூண்டு சட்னி. சட்டுன்னு எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Advertisment

பூண்டு - 25 அல்லது 30 பல் 
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் 
மல்லித்தூள் - 1 ½ டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
எலுமிச்சை - ½ பழம் 
கடுகு - ½ டீ ஸ்பூன் 
சீரகம் - ½ டீ ஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன் 
உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன் 
கருவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு 
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

செய்முறை:

முதலில், எலுமிச்சை பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து, விதைகளை நீக்கி தனியாக வைக்கவும். பூண்டு பற்களை தோல் உரித்து சுத்தம் செய்து, அம்மி அல்லது உரலில் சேர்த்து அதை ஒன்றாக தட்டி அரைத்துக் கொள்ளவும். உரல் இல்லாதவர்கள், உலர்ந்த மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் 2 பால்ஸ் விட்டு அரைத்து கொள்ளவும்.

பிறகு, அந்த அரைத்த பூண்டு கலவைக்கு மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பிறகு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும். இதைச் செய்யும்போது, சிறிது தண்ணீர் சேர்த்து கலவை கட்டி இல்லாமல் பரபரப்பாக பரிமாறவும்.

Advertisment
Advertisements

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர், கருவேப்பிலை இலைகளை சேர்த்து தாளித்து, கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, நாம் கலந்த கலவையை அந்த பாத்திரத்தில் சேர்த்து, மூடி விட்டு வேக விடவும்.

அடிபிடிக்காமல் பரபரப்பாக கிளறி, எண்ணெய் பிரிந்து நன்றாக வெந்து வரும் வரை அதை வேக விடவும். அவ்வப்போது கிளறி, நன்றாக வெந்ததும் பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றை சேர்த்து, அதை நன்கு கிளறவும்.

இறுதியாக, கஸ்தூரி மேத்தி இலைகளை கைகளால் நன்றாக கசக்கி சேர்த்து, கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால், சுவையான ராஜஸ்தானி பூண்டு சட்னி தயார்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: