Advertisment

ரேஷன் துவரம் பருப்பில் டேஸ்டியான இட்லி சாம்பார்... எந்தப் பொடியும் சேர்க்க வேணாம்!

ரேஷன் கடைகளில் இருந்து வாங்கப்படும் பருப்பில் டேஸ்டியான இட்லி சாம்பார் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இந்த சாம்பார் இட்லிக்கு மட்டுமல்லாது தோசைக்கும் தரமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Ration Paruppu sambar recipe in tamil

ரேஷன் கடைகளில் இருந்து வாங்கப்படும் பருப்பில் டேஸ்டியான இட்லி சாம்பார் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

நம்முடைய வீடுகளில் அன்றாட தயாரிக்கும் உணவுகளில் ஒன்றாக இட்லி, தோசை இருக்கிறது. அரிசி மாவில் தயார் செய்யப்படும் இந்த உணவுகள் சிறந்த காலை, இரவு உணவுகளாக இருந்து வருகின்றன. இவற்றுடன் சாம்பார், சட்னி வகைகளுடன் ருசித்து மகிழ்வோம். 

Advertisment

சாம்பார்களில் பல வகைகள் உள்ளன. இந்த சாம்பாருக்கு மிக முக்கிய பொருளாக துவரம் பருப்பு இருக்கிறது. தற்போது பருப்புகளின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. அதனால், அரசு ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்புகள் தான் நமக்கு ஆறுதல்  தருகிறது. 

அந்த  வகையில், ரேஷன் கடைகளில் இருந்து வாங்கப்படும்  பருப்பில் டேஸ்டியான இட்லி சாம்பார் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இந்த சாம்பார் இட்லிக்கு மட்டுமல்லாது தோசைக்கும் தரமாக இருக்கும். 

தேவையான பொருட்கள் 

Advertisment
Advertisement

ரேஷன் துவரம் பருப்பு - 1 கிளாஸ் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
பெருங்காயம் - 1 பிஞ்ச் 

தக்காளி - 3 சிறியது 
கஷ்மீரி மிளகாய் - 8
பூண்டு - 2 பற்கள் 
சீரகம் - 1 ஸ்பூன் 
மல்லி விதை - 1 ஸ்பூன் 

எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு 
சீரகம் - 1/2ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை -  1 கொத்து 
பெரிய வெங்காயம் - 3 பெரியது 
கஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு  - தேவையான அளவு 

நீங்கள் செய்ய வேண்டியவை  

முதலில் ஒரு குக்கர் எடுத்து அதில் நன்கு  அலசிய துவரம் பருப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து 4 விசில் வர விடவும். பிறகு இதனை பருப்பு கடையும் மத்து வைத்து கடைந்து கொள்ளவும். 

ஒரு மிக்சியில் 3 சிறிய தக்காளியை வெட்டி சேர்க்கவும். அதனுடன், கஷ்மீரி மிளகாய், பூண்டு, சீரகம், மல்லி விதை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

இதன் பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சூடேற்றவும். பிறகு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு பெரிய விடவும். பின்னர் சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

இவை நன்றாக வதங்கி வரும் போது, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும். இவற்றை ஒரு நிமிடத்திற்கு நன்கு வதக்கவும். 

பிறகு, அவற்றுடன் கஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு  சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான  அளவு தண்ணீர் மற்றும் புளி கரைசல் சேர்க்கவும்.  இவற்றை கொதிக்க விடவும்.

நன்றாக கொதி வரும் போது, ஏற்கனவே வேக வைத்துள்ள பருப்பை சேர்க்கவும்.  அத்துடன் ஒரு துண்டு வெல்லம் சேர்க்கவும். இவற்றை நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக சிறிதளவு கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கீழே இறக்கினால் டேஸ்டியான இட்லி சாம்பார் ரெடி. 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment