சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அப்படியாக இந்த சம்மரில் ரேஷன் அரிசி வைத்து புசுபுசுன்னு பூரி எப்படி செய்வது என்று ஃபத்து சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
அரிசி வெங்காயம் சோம்பு தேங்காய் உப்பு பச்சரிசி மாவு மிளகாய் தூள் எண்ணெய்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சமையல் அரிசி அல்லது ரேஷன் புழுங்கல் அரிசி எடுத்து தேவையான அளவு எடுத்து நன்கு கழுவி ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அரிசி நன்கு ஊரியதும் தண்ணீர் வடித்து வெறும் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பெரிய வெங்காயம், சோம்பு, துருவிய தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து சிறிது காரத்திற்கு மிளகாய் தூளும் சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும்.
பின்னர் இவற்றை பூரி திரட்ட சின்ன சின்ன உருண்டையாக உருட்டி திரட்டி சுட்டு எடுத்தால் சுவையான பூரி ரெடி ஆகிவிடும்.