/indian-express-tamil/media/media_files/2025/09/16/screenshot-2025-09-16-164443-2025-09-16-16-45-06.jpg)
இந்தியாவின் அனைத்து சம்யலறைகளிலும் நாம் ரவையை பார்க்கலாம். கரடுமுரடான இந்த பொருள் சமைத்தப் பிறகு பஞ்சு போல மிருதுவாக மாறும். நம்மில் பலர் ரவை என்றாலே தெறித்து ஓடுவோம், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் ஒரு உணவு என்றால் அது ரவா உப்புமாதான். ரவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, ஏனெனில் இதில் செலினியம் என்ற பொருள் உள்ளதால், இது இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களைத் தடுக்க உதவுகிறது. ரவை இரும்புச்சத்து நிறைந்தது என்பதால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலுக்கு தேவையான எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ரவா நாம் வெறுக்கும் ஒரு உணவாக இருந்தாலும் உண்மையில் ரவா நாம் அறியாத பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதை வைத்து ஒரு அருமையான ரவா போண்டா சிம்பிளாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப் (200 கிராம்)
தயிர் – 1 கப் (250 மில்லி)
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
மல்லி இலை – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
தண்ணீர் – 100 மில்லி
செய்முறை
ஒரு அகன்ற பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொண்டு, அதனுடன் உப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் முந்திரியைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, தயிர் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவு சற்று தளர்வாக இருந்தால் இன்னும் சிறந்தது. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, கையில் எண்ணெய் தடவி உருட்டி வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கி, உருட்டிய ரவா போண்டாக்களை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.
சுவையான மற்றும் மொறுமொறுப்பான ரவா போண்டா இதோ தயார்! இதனை தேநீர் நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.