/indian-express-tamil/media/media_files/2025/09/30/download-66-2025-09-30-15-23-10.jpg)
உலகளவில் தென்னிந்திய உணவுகளுக்கு தனி இடம் உண்டு. அதிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையும் வித்தியாசமான சுவைகளை கொண்டவை. அந்த வகையில் காலை உணவு என்றால் பெரும்பாலும் எல்லோருடைய சாய்ஸ் -ம் இட்லி தான். குழந்தைகள் முதல் வயதானவர்கள் என எல்லோருக்கும் ஏற்ற இட்லியை விதவிதமாக செய்யலாம். இட்லி வகைகளில் ரவா இட்லிக்கு தனி இடம் உண்டு. அரிசி மாவு இல்லாத நிலையில் சட்டென்று இட்லி வேண்டுமெனில் ரவையை கொண்டு மெத்தென்ற இட்லியை தயாரித்துவிட முடியும். இந்த ரவா இட்லியை எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை / சூஜி – 1 கப்
தயிர் – 1 கப்
தண்ணீர் – ½ கப் (தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
இஞ்சி – 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை – சில
கொத்தமல்லி – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது)
பாக்கிங் சோடா – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – ½ டீஸ்பூன்
கடலை பருப்பு – ½ டீஸ்பூன்
முந்திரி – 6–7
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கரிவேப்பிலையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதற்குப் பிறகு ரவையை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து, அதை சிறிது நேரம் குளிர வைக்கவும்.
இப்போது அந்த வறுத்த ரவையில் தயிர், உப்பு, தண்ணீர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இட்லி வைத்து உதிராமல் இருப்பதற்காக ஸ்டீமிங் செய்யும் நேரத்தில் பாக்கிங் சோடாவைச் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும்.
வெந்ததும் சுட சுட தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறுங்கள்! இதை உங்கள் வீட்டு குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.