பாரம்பரிய ராயலசீமா சுவையில் பருப்பு சாதம், வேர்க்கடலை சட்னி! இப்படி செஞ்சு அசத்துங்க!

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றான பருப்பு சாதம் (Lentil Rice) மற்றும் வேர்க்கடலை சட்னி (Peanut Chutney) ஆகியவற்றை எப்படித் தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றான பருப்பு சாதம் (Lentil Rice) மற்றும் வேர்க்கடலை சட்னி (Peanut Chutney) ஆகியவற்றை எப்படித் தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Paruppu Satham

பாரம்பரிய ராயலசீமா சுவையில் பருப்பு சாதம், வேர்க்கடலை சட்னி! இப்படி செஞ்சு அசத்துங்க!

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றான பருப்பு சாதம் (Lentil Rice) மற்றும் வேர்க்கடலை சட்னி (Peanut Chutney) ஆகியவற்றை எப்படித் தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம். இந்த எளிய மற்றும் சுவையான உணவு, ஆரோக்கியமானது மட்டுமல்ல, விரைவாகவும் சமைக்கக்கூடியது.

Advertisment

வேர்க்கடலை சட்னி: முதலில், ஒரு கப் வேர்க்கடலையை தோல் நீக்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே கடாயில், நறுக்கிய 2 தக்காளி, 7 பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி விதை, பூண்டு மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கிய பிறகு, புதிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை ஆறிய பிறகு, அதன் தோலை நீக்கி, அதை மட்டும் முதலில் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த வேர்க்கடலையுடன், வதக்கிய தக்காளி கலவை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவினால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்!

பருப்பு சாதம்: கால் கப் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு, மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த பாசிப்பருப்புடன், அரை கப் அரிசியைச் சேர்த்து, இரண்டையும் நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பு, மிளகு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம், 3 பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை கடாயில் சேர்த்து, அதனுடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். கடாயை மூடி வைத்து, சாதம் மற்றும் பருப்பு வெந்து, தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். சுவையான மற்றும் சத்தான பருப்பு சாதம் இப்போது தயார். வேர்க்கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இந்த ராயலசீமா ஸ்பெஷலை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: