கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக வெறும் 5 பொருட்களை வைத்து சுவையான அரிசி போண்டா எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பச்சரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - 3/4 கப் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை உப்பு எண்ணெய்
செய்முறை:
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு நன்கு அரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும். பிறகு உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம், தேங்காய் சட்னி, இட்லி பொடி வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தக்காளி சட்னி, சாம்பார் செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.