வாங்க! இன்னைக்கு நாம சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்குற மாதிரி ஒரு சூப்பரான வெங்காயத் தொக்கு எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். இது ரொம்ப சுலபம், அதே சமயத்துல பத்து நாள் வரைக்கும் கெடாம இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
முதல்ல ஒரு கடாயில சின்ன துண்டு கட்டிப் பெருங்காயம் இருந்தா போட்டு வறுத்து பொடியாக்கி எடுத்துக்கோங்க. இல்லன்னா, கடாயில ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு வெடிக்க விடுங்க. அப்புறம் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சிவக்க வறுத்துக்கோங்க. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு, அந்த சூட்டிலேயே ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு போட்டு லைட்டா வறுத்து எடுத்து ஆற வச்சு பொடியா அரைச்சுக்கோங்க. தூள் பெருங்காயம் இருந்தா, இந்த மசாலா பொடியோட ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைச்சுக்கலாம்.
Advertisment
Advertisements
அடுத்து அடுப்புல வாணலிய வச்சு, அரை கப் நல்லெண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகு போடுங்க. கடுகு வெடிச்சதும் தட்டி வச்ச 15 பல் பூண்டு சேர்த்து வதக்குங்க. ஒரு கொத்து கறிவேப்பிலைய கிள்ளிப் போட்டு ஒரு பத்து நிமிஷம் வதக்குங்க.
இப்போ மெல்லிசா நீளவாக்குல நறுக்கின அரை கிலோ பெரிய வெங்காயம் சேர்த்து நல்லா வதக்குங்க. வெங்காயம் சீக்கிரம் வதங்க ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு மிதமான தீயில பத்து நிமிஷம் வதக்குனா போதும்.
வெங்காயம் நல்லா கூழ் மாதிரி வந்ததும், ஒரு எலுமிச்சை சைஸ் புளியை முக்கால் கப் தண்ணில கரைச்சு ஊத்துங்க. நல்லா கலந்து அஞ்சு நிமிஷம் கொதிக்க விடுங்க. புளியோட பச்சை வாசனை போனதும் ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் போடுங்க. நாம வறுத்து அரைச்ச பொடியையும் சேர்த்துக்கோங்க. ஒரு டீஸ்பூன் பொடிச்ச வெல்லம் போட்டு நல்லா கலந்து மிதமான சூட்டில ரெண்டு நிமிஷம் கிளறினா போதும்.