சர்க்கரை நோய் உள்ளவர்கள், அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறப்படுகிறது. இந்நிலையில் நம்மில் பலரால் அரிசி சாதத்தை சாப்பிடுவதை நாம் நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் அளவை குறைத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டாலும். அதை நாம் செய்வதில் கடும் சிக்கல் இருக்கிறது. இந்நிலையில் சில நேரங்களில் அரிசி சாதத்தை சாப்பிடுவதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நாள் முழுவதும் அரிசி சாதத்தை வைத்துவிட்டு, சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்காது என்று சில ஆய்வுகள் கூறுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் அரிசி சாதத்தை வைக்கும்போது, அதன் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவாக இருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரிசியில் உள்ள ஸ்டார்ட்ச் குளிரூட்டப்படும்போது, இது கரையாத ஸ்டார்ச்-ஆக மாறுகிறது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படாது. இவை குடல் நுண்ணுயிரிகளுக்கு உணவாகிறது.