அரிசி ரவையில் இந்த இட்லியை நீங்கள் செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி
அரிசி ரவை – 2 கப்
உளுந்தம் பருப்பு- அரை கப்
உப்பு ; தேவையான அளவு
செய்முறை: உளுந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள், பிறகு கிரைண்டரில் போட்டு, தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெங்கள். அரிசி ரவையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, நன்கு கரைத்து வையுங்கள். மாவு நன்கு புளித்தவுடன் சுமார் 8 மணி நேரம் கழித்து இட்லி தயாரித்து சாப்பிடுங்கள்.