New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/08/ryNaO74ps6ce8IrOQpTC.jpg)
பருப்பு வேகவைத்து சாம்பார் தாளித்து செய்வது என்பது ஒரு மிகப்பெரிய ப்ராசஸ்தான். ஆனால் பருப்பே இல்லாமல் வெறும் இரண்டு நிமிடத்தில் சுவையான சாம்பார் எப்படி செய்வது என்று வி.எஸ்.என் கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த சாம்பாரை இட்லி தோசைக்கு ஈசியாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்
தக்காளி
பூண்டு
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
சீரகம்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
உப்பு
பெருங்காயத்தூள்
கடலை மாவு
சாம்பார் தூள்
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு குக்கரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரில் வேகவிட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் இந்த வேக வைத்ததையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
ஓரு இரண்டு ஸ்பூன் கடலை மாவு எடுத்து தண்ணீர் விட்டு கரைத்து கொதித்து வரும்போது குழம்பில் சேர்க்கவும். பின்னர் நன்கு கொதி வந்ததும் இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடத்திற்கு முன் சாம்பார் தூள் மற்றும் கொத்தமல்லி தலைகளை தூவினால் அவ்வளவுதான் பருப்பு இல்லாத சாம்பார் ரெடி ஆகிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.