உணவு பொருட்களில் மிகவும் சிறந்தது எள்ளுதான். இந்நிலையில் நாம் அதிலிருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளாமலே அதை தவிர்த்திருப்போம்.
இதனால் சர்க்கரை நோய் தடுக்க முடியும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தூக்கம் இல்லாமல் இருந்தால், இதை சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வர உதவும். மேலும் நுரையீரல் தொற்றுகளை தவிர்க்க உதவும். மேலும் மன அழுத்தம் வராமல் பாத்துக்கொள்ளும்.
இந்நிலையில் எள்ளை வைத்து ஒரு சூப்பர் ரெசியை பார்க்கலாம். கருப்பு அல்லது வெள்ளை எள் ஒரு கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக வறுக்க வேண்டும். சூடு தனிந்ததும், மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன், 3 வத்தல், 5 பல் பூண்டு, பெருங்காயம், உப்பு, சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இதில் எண்ணெய் ஊற்றி தாலித்து கொட்டினால், சுவையான எள்ளு சட்னி ரெடி.