/tamil-ie/media/media_files/uploads/2023/01/download-2023-01-15T120730.621.jpg)
நாம் சர்க்கரை என்றாலே பயப்படுவோம். அதிகபடியான இனிப்பு சாப்பிட்டால் , உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை ஏற்படலாம். இந்நிலையில் எல்லா வகையான இனிப்புகளையும் கைவிட வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டுமா என்றால் இல்லை என்பதுதான் விடை.
இந்நிலையில் பிராசஸ் செய்யப்படாத இனிப்பு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட பொருட்களை நாம் சாப்பிடக்கூடாது. சீரியல்ஸ், கெச்சப், பிஸ்கட்ஸ், சாக்லேட், கோலா ஆகியவையை நாம் முற்றிலுமாக கைவிட வேண்டும்.
இந்நிலையில் வீட்டிலேயே லட்டு, அல்வா எப்போதாவது செய்தால் நாம் அதை சாப்பிடலாம்.இந்நிலையில் நமது உணவுவில் , சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்று நாம் பயப்படுவோம். ஆனால் சர்க்கரை என்பதை விட செய்ற்கை கலர், மற்றும் சில கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/sugar-shutterstock_615908132.jpg)
இந்நிலையில் இனிப்பு சாப்பிடுவதால் புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் வருமா என்ற கேள்வியும் எழும்புகிறது. ஆனால் இனிப்பு சாப்பிடுவதால் நேரடியாக சர்ககரை நோய் அல்லது புற்றுநோய் ஏற்படாது. ஆனால் நவீனமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கும்.
இந்நிலையில் 6 முதல் 9 டீஸ்பூன் வரை ஒரு நாளுக்கு சக்கரை சாப்பிடலாம். இதற்கு மேலாக நாம் சர்ககரையை சாப்பிடக்கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.