பெரும்பாலானோர் தாகத்துடன் எழுந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தங்கள் நாளைத் தொடங்க விரும்புகிறார்கள். இது தாகத்தைத் தணிக்க உதவுவது மட்டுமல்லாமல், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.
இதனை, வேதம்ரிட்டின் நிறுவனர் டாக்டர் வைஷாலி சுக்லா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், “வெதுவெதுப்பான நீரை ஆறவைத்து பிறகு குடிப்பதுதான் சரியான வழி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இதை காலையில் வெறும் வயிற்றில் செய்ய முடியாவிட்டால், ஒருவர் 2 கப் தண்ணீரில் ½ டீஸ்பூன் உலர் இஞ்சி பொடி அல்லது 1 அங்குல உலர் இஞ்சி குச்சியை கொதிக்க வைத்து பாதியாக குறைக்கலாம்.
காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடையில் இதை குடிக்கவும். காலையில், வழக்கமான வெதுவெதுப்பான நீரை, பாதியாகக் குறைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தலாம்” என்று டாக்டர் வைஷாலி கூறினார்.
கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, காலையில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது மலச்சிக்கலுக்கு உதவும். ஏனெனில், இரைப்பை குடல் (ஜிஐ) ஒரு பெரிய தசை. அதில், நீரின் வெப்பம் மலச்சிக்கல் போன்றவற்றுக்கு உதவ உங்கள் ஜிஐ பாதையை சிறிது தளர்த்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/