Advertisment

காலையில் இது... மதியம் அது... இரவில் இன்னொன்று... நோய்களை விரட்ட இந்த 3 பொருள் போதும்: மருத்துவர் சிவராமன்

இஞ்சி, சுக்கு, கடுக்காயின் நன்மைகள் பற்றி மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
healthy lifestyle

இஞ்சி, சுக்கு, கடுக்காயை தினமும் இப்படி சாப்பிட்டு வர நோய் வராது என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அவர் பேசுகையில், எப்போதாவது, எங்காவது தான் துரித உணவு எடுத்துக் கொள்கிறோம் என நினைத்து கொண்டிருக்கிறோம்.

Advertisment

ஆனால் சிறிய சிறிய விஷயங்களை நினைத்துப் பார்த்தால் அது பெரிதாகிறது. சிக்கலாகிறது. அந்த காலத்தில் காலையில் நீர்ஆகாரம் அருந்தி வேலைக்கு சென்றார்கள். இல்லை என்றால் பருவ காலத்திற்கு ஏற்ப உணவு எடுத்தார்கள். கசாயம் செய்து குடித்தார்கள். முசுமுசு கீரையில் கசாயம் செய்து குடித்தார்கள். அது சளி, இருமலுக்கு நல்லது. 

அதே போல் அவர்கள் காலை,  மாலை, மதியம் என தினம் குடிக்க வேண்டிய உணவுகள் என பட்டியலிட்டு வைத்திருந்தார்கள். காலையில் இஞ்சி சாறு, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் பொடி. இதை மூன்றும் சாப்பிடுபவருக்கு எந்த நோயும் வராது என்று முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

Advertisment
Advertisement

பித்ததை தணிப்பதற்கு காலையில் இஞ்சி சாறு. மதியத்தில் செரிமானத் சீராக்குவது, வாதத் தன்மையே போக்க சுக்குப் பொடி எடுத்தார்கள். மாலையில் ஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க, 6 சுவை கொண்ட ஒரே உணவாக கடுக்காய் பொடி எடுத்துக் கொண்டார்கள். இது பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment