வதக்க வேண்டாம்; இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ் இப்படி செய்து பாருங்க!
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற மாதிரி ஒரு சைட் டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம். சட்னி சாம்பார் செய்ய நிறைய நேரம் ஆகிறது என்று புலம்புபவர்கள் கூட இதை ட்ரை பண்ணலாம்.
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற மாதிரி ஒரு சைட் டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம். சட்னி சாம்பார் செய்ய நிறைய நேரம் ஆகிறது என்று புலம்புபவர்கள் கூட இதை ட்ரை பண்ணலாம்.
சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அந்தவகையில் மிகவும் டிப்ரண்டாக இட்லி தோசைக்கு ஒரு சைட் டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
எப்பவுமே இட்லி தோசை செய்வோம். ஆனால் அதற்கு ஒரே மாதிரியான சட்னி சாம்பார் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஃபோர் அடித்துவிடும். இனிமேல் அந்த மாதிரி எல்லாம் போர் அடிக்காத மாதிரி இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான சைட் டிஷ் எப்படி செய்வது என்று அபூர்வாஸ் நல பாகம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
Advertisements
பிள்ளைகள் கோடை விடுமுறையில் இருக்கும் போது தான் இந்த மாதிரி புதுவிதமான டிஷ்களை செய்வதற்கு நேரம் இருக்கும் எனவே இப்போதே இதை வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி காய்ந்த மிளகாய் நிலக்கடலை எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை உப்பு
செய்முறை
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும். அதில் தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, நிலக்கடலை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
ஆகியவற்றை மூடி போட்டு ஒரு பத்து முதல் 15 நிமிடம் வேக விடவும். பின்னர் இவற்றை எடுத்து ஆற வைக்கவும் ஆரியப்பின் தக்காளியின் மேல் உள்ள தோல் உரிந்து வரும். எனவே தக்காளியின் தோலை நீக்கிவிட்டு இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்தால் சட்னி ரெடி. இதற்கு தாளிப்பு சேர்க்க ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கொட்டினால் சட்னி தயாராகிவிடும்.