/indian-express-tamil/media/media_files/2025/07/31/chutney-recipe-2025-07-31-19-46-17.jpg)
இட்லி, தோசை என டிஃபன் வகைகளுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் கார சட்னி ஆகியவற்றை தான் அதிகமாக செய்திருப்போம். ஆனால், இதற்கு மாற்றாக பொட்டுக் கடலை கொண்டு ஒரு சூப்பரான சட்னி எப்படி தயாரிக்கலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
பெரிய வெங்காயம்,
இஞ்சி,
பூண்டு,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
புளி,
பொட்டுக் கடலை,
உப்பு,
கடுகு,
வரமிளகாய் மற்றும்
உளுந்து.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் இரண்டு பெரிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.
இதையடுத்து, சிறிய துண்டு இஞ்சி, நான்கு பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிய அளவில் புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதற்கடுத்து, அடுப்பை அனைத்து விடலாம்.
இவை அனைத்தும் ஆறிய பின்னர், இத்துடன் ஆறு டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றவும்.
இத்துடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இனி, தாளித்த பொருட்களை மிக்ஸியில் அரைத்த கலவையுடன் சேர்த்து கலக்கவும். இவ்வாறு செய்தால் சுவையான பொட்டுக் கடலை சட்னி தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.