/indian-express-tamil/media/media_files/2025/04/18/D6qXizl3BcqZltltQF0e.jpg)
தலை முடி உதிர்தல், முகப்பொலிவின்மை, கண் பிரச்சனை, தலைவலி, அஜீரணம் போன்ற பல வகையான பிரச்சனைகள் இன்றைய காலத்தில் உள்ளது. இவை அனைத்துக்கும் ஒரே ஜூஸ் குடித்தால் போதும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம் என டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார் அது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 2
நெல்லிக்காய் - 2
கருவேப்பிலை
எலுமிச்சை சாதம்
செய்முறை
நெல்லிக்காய், கேரட், கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து கொள்ளவும். இதனை வடிகட்டாமல் இதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலந்து காலை நேரத்தில் சாப்பாட்டுக்கு முன் குடிக்கலாம்.
இதனை தினமும் குடித்து வருவதால் கண் பிரச்சனை, கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். இதனைத் தொடர்ந்த அறுபது நாட்களுக்கு குடிக்க வேண்டும். உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பொலிவுடன் காணப்படும்.
பிபி, கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இதனை தாராளமாக குடிக்கலாம். இதில் உள்ள அதிக நார்ச்சத்து தேவையற்ற கொலஸ்ட்ராலை வெளியேற்றும். இந்த ஒரு ஜூஸ் மலச்சிக்கல், முடி உதிர்தல், முகம் பொலிவு, சரும பிரச்சனை, உடல் உஷ்ணம், சரும பொலிவு, அஜீரணம், குடல் சுத்தம், கழிவுகள் வெளியேற்றம் போன்றவற்றிற்கு உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.