ஊற வைத்த பாதாம் அல்லது வேர்கடலை... இப்படி சாப்பிட்டால் டபுள் நன்மை!
நட்ஸ் என்று கூறப்படும் பாதாம் மற்றும் இன்னும் பல வகை பருப்புகள் உடலுக்கு அதிக நன்மை திருகிறது. சர்க்கரை அளவை கட்டுபடுத்துவது, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்த உதவுகிறது. மேலும் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நினைவாற்றல் குறைபாடு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
நட்ஸ் என்று கூறப்படும் பாதாம் மற்றும் இன்னும் பல வகை பருப்புகள் உடலுக்கு அதிக நன்மை திருகிறது. சர்க்கரை அளவை கட்டுபடுத்துவது, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்த உதவுகிறது. மேலும் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நினைவாற்றல் குறைபாடு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
Advertisment
உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாக தொடர வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் ஊரவைத்த பாதாம், வேர்கடலை, வால்நட், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிடலாம். இதில் வைட்டமின் இ, மெக்னிஷியம், பாஸ்பரஸ், கொழுப்பு சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை இருக்கிறது. நட்ஸ் உங்கள் இதயத்திற்கு மட்டும் நல்லது. இதில் இருக்கும் ஓமேகா 3 பேட்டி ஆசிட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை சரி செய்கிறது. மேலும் மறைந்து தாக்கும் மாரடைப்பை தடுக்கிறது.
மேலும் நட்ஸை ஊரவைத்தால் அதில் இருக்கும் சத்துக்களை நட்ஸ் எடுத்துக்கொள்ளும் மற்றும் பைடிக் ஆசிட் நீக்குவதால் அஜீரணம் ஏற்படாது.
நட்ஸை சாப்பிடுவதற்கு காலை தான் சரியான நேரம். தண்ணீர் குடித்ததும், தொடர்ந்து நட்ஸ் சாப்பிடலாம். இதனால் நமது ஹார்மோன்களின் ஆரோக்கியதற்கு நல்லது. மேலும் கொல்ஸ்ட்ராலை கட்டுபடுத்தி, நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது. வால்நட் மற்றும் பிஸ்தா ஆகியவை உடல் எடை குறைக்க உதவுகிறது. உங்களது சருமம் இளமையாக காட்சியளிக்கும். செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும்.
வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் கைநிறைய பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். வாரத்தின் நடுவில் பிஸ்தா சாப்பிடலாம். இதனால் நல்ல மாற்றங்களை நீங்கள் காணலாம்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news