மாவு பிசைந்து ஊற வைக்க வேண்டாம்… இப்படி செய்தால் உடனே சப்பாத்தி செய்யலாம்; சாஃப்ட்டாகவும் வரும்!
சாஃப்டாக சப்பாத்தி வர வேண்டுமா அதற்கு முதலில் மாவி எப்படி பிசைய வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும். எனவே சாஃப்ட் சப்பாத்திக்கு இந்த முறையை பின்பற்றி மாவு பிசையுங்கள்.
சாஃப்டாக சப்பாத்தி வர வேண்டுமா அதற்கு முதலில் மாவி எப்படி பிசைய வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும். எனவே சாஃப்ட் சப்பாத்திக்கு இந்த முறையை பின்பற்றி மாவு பிசையுங்கள்.
சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
சப்பாத்தி செய்யுறது ரொம்ப ஈஸிதான். ஆனா, அது கல்லு மாதிரி வராம, பஞ்சு மாதிரி மென்மையா வரணும்னா சில விஷயங்களை கவனிச்சு செய்யணும். அதுக்கு சப்பாத்தி மாவு எப்படி பிசைஞ்சா ரொம்ப சாஃப்டா வரும்னு பிஸ்மி சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கோதுமை மாவு
எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு அகலமான கிண்ணத்துல சப்பாத்தி மாவை போட்டுக்கோங்க. அதுக்கப்புறம் அதுல கொஞ்சமா எண்ணெய் ஊத்துங்க. ரொம்ப ஊத்திடாதீங்க, ரெண்டு ஸ்பூன் போதும். இப்போ அந்த எண்ணெயையும் மாவையும் நல்லா கலந்து விடுங்க. மாவு முழுக்க எண்ணெய் படுற மாதிரி கலந்துக்கோங்க.
அடுத்ததா கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்து மாவை பிசைய ஆரம்பிங்க. தண்ணிய ஒரேடியா ஊத்திடாம, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து பிசைஞ்சாதான் மாவு ரொம்ப தண்ணியாவும் இல்லாம, கெட்டியாவும் இல்லாம சரியா வரும். மாவு நல்லா சேர்ந்து வர்ற வரைக்கும் பிசைஞ்சுக்கோங்க.
இப்போ ஒரு சப்பாத்தி கட்டை இல்லனா தேய்க்குற கல்லு எடுத்துக்கோங்க. பிசைஞ்ச மாவுல இருந்து ஒரு சின்ன உருண்டை எடுத்து அந்த கட்டைல வச்சு தட்டையா தேயுங்க. ரொம்ப மெல்லிசாவும் இல்லாம, ரொம்ப மொத்தமாவும் இல்லாம தேயுங்க.
தேச்சதுக்கு அப்புறம் அந்த மாவை ஒரு தடவை மடிச்சுக்கோங்க. அப்புறம் மறுபடியும் அதை நல்லா பிசைஞ்சுக்கோங்க. இப்படி பண்றதுனால சப்பாத்தி ரொம்ப சாஃப்டா வரும்.