சரியான பதத்தில், தேவையான பொருட்களை பயன்படுத்தி மாவு அரைப்பதன் மூலம் இட்லி சாஃப்டாக இருக்கும் என்று சமையல் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார். அதன் ரெசிபியை இதில் காணலாம்.
சரியான பதத்தில், தேவையான பொருட்களை பயன்படுத்தி மாவு அரைப்பதன் மூலம் இட்லி சாஃப்டாக இருக்கும் என்று சமையல் கலைஞர் தீனா குறிப்பிட்டுள்ளார். அதன் ரெசிபியை இதில் காணலாம்.
காலை உணவாக இட்லி சாப்பிடுவதற்கு பலரும் விரும்புகின்றனர். செரிமானத்திற்கு சுலபமாக இருப்பதால், இட்லி பலரது விருப்பமாக இருக்கிறது. மேலும் இட்லியை செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதை போன்று தோன்றலாம்.
Advertisment
ஆனால், சரியான பதத்தில், தேவையான பொருட்களை பயன்படுத்தி மாவு அரைப்பதன் மூலம் இட்லி சாஃப்டாக இருக்கும். அப்போது தான் செரிமானத்திற்கு எளிதாக இருக்கும். அந்த வகையில் மிருதுவான இட்லி செய்வதற்கான ரெசிபியை சமையல் கலைஞர் தீனா தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 2 கப் உளுந்து - 1 கப் உப்பு மற்றும் வெந்தயம்
Advertisment
Advertisements
செய்முறை:
உளுந்தை சுமார் 6 முதல் 7 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊறிய பின்னர், அதனை நன்றாக கழுவ வேண்டும். இதேபோல், அரிசி மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து சுமார் 6 முதல் 7 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
இப்போது, உளுந்தை மட்டும் தனியாக கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றாமல் தேவைக்கு ஏற்ப தெளித்து அரைக்க வேண்டியது அவசியம். இனி, அரிசி மற்றும் வெந்தயத்தை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இப்போது, இரண்டு மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலக்க வேண்டும். இனி மாவு புளித்த பின்னர், இட்லி பாத்திரத்தில் அவித்து எடுக்கலாம். குறிப்பாக, தண்ணீர் கொதித்த பின்னர் தான் மாவு உற்றி வேக வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது இட்லி நன்றாக புசு புசுவென்று சாஃப்டாக வரும்.