/indian-express-tamil/media/media_files/2025/06/07/cdVVMFC9Ncd2iYPElHxU.jpg)
பெரும்பாலானவர்கள் இட்லியை காலை உணவாக சாப்பிட விருப்பப்படுகின்றனர். குறிப்பாக, எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு பொருளாக இட்லி இருக்கிறது. எனினும், வீட்டில் இட்லி அவிக்கும் போது சாஃப்டாக வருவதில்லை என்று பலர் கூறுகின்றனர்.
அந்த வகையில், இட்லியை எவ்வாறு சாஃப்டாக அவிக்கலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலம் இட்லி சாஃப்டாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 500 கிராம்,
பச்சரிசி - 250 கிராம் மற்றும்
உளுந்தம் பருப்பு - 250 கிராம்
செய்முறை:
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி, தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவிடவும். நான்கு மணி நேரம் கழித்து, உளுந்தை 8 முறை அலச வேண்டும். அதன் பின்னர், உளுந்தை கிரைண்டரில் போட்டு, 450 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து, நைசாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
இனி, அரிசியை கிரைண்டரில் போட்டு, 350 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து, ரவை பதத்தில் அரைக்க வேண்டும். அரைத்த அரிசி மற்றும் உளுந்து மாவை ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு கல் உப்பை சேர்த்து, கைகளால் மெதுவாக கலக்க வேண்டும். இந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
இதற்கடுத்து, புளித்த மாவை கரண்டி கொண்டு கலக்காமல் மெதுவாக எடுத்து, இட்லி தட்டில் ஊற்றி, பத்து நிமிடம் ஆவியில் வேக விடவும். இவ்வாறு செய்தால் சுவையான மற்றும் சாஃப்டான இட்லி தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.