/indian-express-tamil/media/media_files/2024/10/17/7qMnXQKkg63Enc0yfElg.jpg)
சாஃப்ட் இட்லி தயார் செய்ய செஃப் மணி கொடுக்கும் சிம்பிள் டிப்ஸ்
தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி இருக்கிறது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த இட்லி அருமையான உணவை சாஃப்ட்டாக தயார் செய்ய பலரும் சிரமப் படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லியை தயார் செய்ய உங்களுக்காவே செஃப் மணி தேடி சொல்லும் சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 3 கப்
உளுந்து - 1 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
வெந்தயம் - 2 பின்ச் அளவு
கல் உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இட்லி அரிசியை போட்டு தண்ணீர் விட்டு நன்கு அலசிக் கொள்ளவும். இதேபோல், உளுந்தையும் நன்கு அலசிக் கொள்ளவும். வெந்தயம் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரு அலசல் போதும். இவற்றை 6 மணி ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு, உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதன் பிறகு, இட்லி அரிசி வெந்தயம் மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், வழக்கம் போல் இட்லிக்கு மாவு சேர்ப்பது போலவே, கையில் கல் உப்பு எடுத்து, அதனை மாவுடன் சேர்த்து உங்கள் கையால் நன்கு கலந்து விடவும். இவற்றை அப்படியே சுமார் 8 மணி நேரத்திற்கு புளிப்பு ஏற வைத்து விடவும்.
இப்போது, அந்த மாவை எடுத்து இட்லிகளை சுட்டால், சூடான மற்றும் பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லி ரெடி.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.