/indian-express-tamil/media/media_files/cBIgunGCQWwgRWPnnWAX.jpg)
பஞ்சு போன்ற மல்லிப் பூ இட்லி செஃப் தீனா டிப்ஸ்
தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.
கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலரும் சிரமப் படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லியை தயார் செய்ய உங்களுக்காவே செஃப் தீனா தேடி தந்துள்ள சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு கிலோ
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
கொட்டை முத்து - 6 (உடைத்து தோல் நீங்கியது)
நீங்கள் செய்ய வேண்டியவை
அரிசி மற்றும் உளுந்தை வழக்கம் போல் இட்லிக்கு என ஊற வைப்பது போல் ஊற வைத்து விடவும்.
இப்போது நன்கு ஊறிய உளுந்தை மட்டும் எடுத்து அதனை கிரைண்டரில் போட்டு ஆட்டிக் கொள்ளவும். உளுந்து சேர்க்கும் போது முதல் தண்ணீர் சேர்க்காமல், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அவற்றை ஆட்டவும். உளுந்தை மெதுவாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு, ஊற வைத்துள்ள அரிசி மற்றும் உடைத்து தோல் உரித்து வைத்துள்ள கொட்டை முத்தை கிரைண்டரில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு தயாராகிய பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அவற்றுடன் உளுந்தம் மாவு சேர்க்கவும். பின்னர் அவற்றை நன்கு கையால் கலந்து கொள்ளவும்.
அரிசி மற்றும் உளுந்தம் மாவும் நன்கு கலந்த பிறகு அவற்றுக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இவற்றை அப்படி 8 மணி நேரம் வைத்து விடவும். பிறகு, மாவு பொங்கி வந்தவும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி ஊத்த ஆரம்பிக்கலாம். இப்பொது உங்களுக்கு தேவையான, நீங்கள் எதிர்பார்த்த பஞ்சு போன்ற மல்லிப் பூ இட்லி ரெடி.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.