சாஃப்ட் இட்லி வரவே இல்லையா? உளுந்து அரைக்க தண்ணீர் இப்படி யூஸ் பண்ணுங்க!

இட்லி மிருதுவாக வர பின்வரும் டிப்ஸை பயன்படுத்திகொள்ளுங்கள்.

இட்லி மிருதுவாக வர பின்வரும் டிப்ஸை பயன்படுத்திகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
கேன்சர் அபாயம்... இட்லி சாப்பிடும் முன்பு கண்டிப்பா இதைக் கவனியுங்க!

இட்லி மிருதுவாக வர பின்வரும் டிப்ஸை பயன்படுத்திகொள்ளுங்கள்.

Advertisment

முதலில் 3 கப்  இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து 1 கப் இருந்தால் போதுமானது. அதாவது 1 பங்கு உளுந்துக்கு, 3 ½  பங்கு இட்லி அரிசி எடுத்து சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி மாவு அரைத்துக் கொள்ளுங்கள். உளுந்து அரைபட 30 நிமிடம் வரை ஆகும். உளுந்து எந்த அளவிற்கு நன்றாக  அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி  மிருதுவாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும்.

அதை எடுத்து விட்டு அரிசியை போட்டு 15 நிமிடம் அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும். நன்றாக அரைபட கூடாது .இட்லி அவ்வளவு நன்றாக வராது. அரிசிக்கு முதலிலேயே தண்ணீரை அதிகமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு அதிகமாக ஊற்றி விடக்கூடாது .

Advertisment
Advertisements

பின் இரண்டையும் ஒன்றாக கலந்து 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போதும் நீங்கள் மாவை கிளறக் கூடாது. குளிர்சாதனப்பெட்டியில்  இருந்து எடுத்து அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது. உடனே ஊற்றினால் அவ்வளவாக மிருதுவாக இருக்காது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: