நாம் காலை உணவாக பிரெட், பாஸ்தா அல்லது ரொட்டி சாப்பிடுவோம். ஆனால் இதற்கு பதில் பராத்தா சாப்பிட்டால் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டதற்கு சமம். பொதுவாக ஆலு பராத்தா காலை உணவாக சாப்பிடப்படுகிறது. இந்நிலையில் சாதரணமாக மிருதுவான பராத்தா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
வழக்கமான கோதுமை மாவில் செய்யாமல், முழுகோதுமையில் மாவை தயார் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்து பிசையுங்கள். ரொம்பவும் தண்ணீர் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாவு பிசையும்போது, நெய் அல்லது எண்ணெய் சேர்த்துகொண்டால் மிகவும் நல்லது. சுமார் அரை மணி நேரமாவது மாவை ஊறவைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ரொட்டி மாவை தேய்ப்பதுபோல் செய்யாமல். தடிமனாக மாவை தேய்க்க வேண்டும். இப்போதும் சிறு அளவு நெய் அல்லது எண்ணெய் சேத்து மாவை தடிமனாக தேய்க்கலாம்.
இப்படி செய்யப்பட்ட பராத்தாவை, அடுப்பை ஆன் செய்து, தவாவில் போட வேண்டும். பொன்னிற வட்டங்கள் தென்படும் போது, அழுத்தி பராத்தாவை திருப்ப வேண்டும். இதுபோல் செய்தால் மிருதுவான பராத்தா ரெடி.