சமைக்க சோம்பலா... 10 நிமிடத்தில் சுவையான சோம்பேறி குழம்பு - இப்படி செய்து அசத்துங்க

சுவையான மற்றும் விரைவாகத் தயாராகும் "சோம்பேறி குழம்பு". இது சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் அருமையான கூட்டணியாக இருக்கும். கட்டாயம் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.

சுவையான மற்றும் விரைவாகத் தயாராகும் "சோம்பேறி குழம்பு". இது சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் அருமையான கூட்டணியாக இருக்கும். கட்டாயம் வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.

author-image
WebDesk
New Update
அடுத்த வீட்டுக் காரங்க எட்டிப் பார்ப்பாங்க... வாசம் வீசும் ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு

உங்களுக்கு சமைக்க சோம்பலாக இருக்கிறதா? அல்லது விரைவாகவும், சுவையாகவும் ஒரு குழம்பு செய்ய விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம்.  உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அருமையான "சோம்பேறி குழம்பு" எப்படி செய்வது என்று கஸ்பேனாஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இது ஒரு தனித்துவமான சுவையுடன், இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒரு அட்டகாசமான குழம்பு.

Advertisment

தேவையான பொருட்கள்:

பல்லாரி வெங்காயம் - 2-3 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
புளி - ஒரு எலுமிச்சை அளவு (கரைத்து வடிகட்டியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் (அல்லது தேங்காய் விழுது)
மல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
வெங்காயம் - ஒரு கைப்பிடி (தாளிக்க)
கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
வெள்ளைப்பூடு - 10 பல் (தாளிக்க)
முட்டை - வேக வைத்தது - 2 (அல்லது தேவைக்கேற்ப)

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், நறுக்கிய பல்லாரி வெங்காயம், தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கரைத்து வடிகட்டிய புளிக்கரைசல், குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, தேங்காய் பால் பவுடர் (அல்லது தேங்காய் விழுது) மற்றும் நறுக்கிய மல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து, கைகளால் நன்றாகக் கலந்து ஊற வைக்கவும். இது குழம்புக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர், ஒரு கைப்பிடி வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை, மற்றும் நசுக்கிய வெள்ளைப்பூடு (10 பல்) சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இந்த குழம்புக்கு பூண்டு சேர்ப்பது சுவையைக் கூட்டும்.

தாளிப்பு பொன்னிறமாக வதங்கியதும், நாம் கலந்து வைத்திருந்த மசாலா கலவையை குக்கரில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். குக்கரை மூடி, 2 முதல் 3 விசில் வரும் வரை வேக விடவும். உருளைக்கிழங்கு மற்றும் மசாலா நன்கு வெந்து குழைந்திருக்கும்.

குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, குழம்பை ஒருமுறை கிளறி விடவும். நீங்கள் ஏற்கனவே வேகவைத்து ஓடு நீக்கிய முட்டைகளை, ஆங்காங்கே சிறு கீறல்கள் போட்டு குழம்பில் சேர்க்கவும். முட்டைகள் உடையாமல் மெதுவாகக் கிளறவும். இறுதியாக, சிறிதளவு நறுக்கிய மல்லி இலை தூவி, ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.
 

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: