மழைக்காலத்தில் உணவோடு சேர்த்து கொஞ்சம் சுவையாக ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருங்கைக்காய் வைத்து ஊறுகாய் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார். காரமும், மணமும் நிறைந்த இந்த ஊறுகாயை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதைகள்: 2 தேக்கரண்டி சீரகம்: 1 தேக்கரண்டி சோம்பு: ½ தேக்கரண்டி வெந்தய விதைகள்: ¼ தேக்கரண்டி கடுகு: 1 தேக்கரண்டி பச்சைப் பயறு: 1 கைப்பிடி உப்பு: தேவையான அளவு வினிகர்: 2 தேக்கரண்டி பச்சை மிளகாய்: 6 பூண்டு: 1 கைப்பிடி இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி ஓமம்: 1 தேக்கரண்டி கூடுதல் உப்பு: ½ தேக்கரண்டி மிளகாய் தூள்: ½ தேக்கரண்டி கடுகு எண்ணெய்: 100 மிலி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் கொத்தமல்லி விதைகள், சீரகம், சோம்பு, வெந்தய விதைகள் மற்றும் கடுகு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் இவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து தனியே வைக்கவும். நறுக்கிய முருங்கக்காய் துண்டுகளில் தேவையான அளவு உப்பு மற்றும் வினிகர் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
மற்றொரு கடாயில் பச்சைப் பயறை வாசனை வரும் வரை வறுத்து, அதில் சிறிதளவு பயறை மட்டும் எடுத்து அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் முருங்கக்காய் கலவையை எடுத்துக்கொண்டு, அதனுடன் அரைத்த மசாலாப் பொடி, வறுத்த மற்றும் அரைத்த பயறு, ஓமம், கூடுதல் உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பச்சை மிளகாய்-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஒரு சிறிய கடாயில் கடுகு எண்ணெயை சூடாக்கி, அது புகை வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய சூடான கடுகு எண்ணெயை முருங்கைக்காய் கலவையின் மீது ஊற்றி, உடனடியாக நன்றாகக் கிளறிவிடவும்.
கை மற்றும் தண்ணீர் படாமல் பாட்டிலில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.